என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரின் முதல் புரோமோ வெளியான போதே, பிற்போக்குத்தனமான சீரியல் என்ற எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால், அதையும் தாண்டி சீரியல் தற்போது வெற்றிகரமாக பயணித்து ரசிகர்களின் குட் புக்கில் இடம்பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலின் புகழ் மேலும் அதிகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த தொடரின் நாயகியான பவித்ரா ஜனனிக்கு போன் செய்துள்ள அனுஷ்கா, 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி, சீரியல் குழுவினர் பாராட்டியுள்ளார். இதனைபதிவிட்டுள்ள பவித்ரா, 'அனுஷ்கா முதலில் போன் செய்த போது ப்ராங்க் என்று நினைத்தேன். தொடர் குறித்து அவர் பாராட்டிய போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது. அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் பொறிக்கப்படும்' எனவும் சிலாகித்து கூறியுள்ளார்.