'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரின் முதல் புரோமோ வெளியான போதே, பிற்போக்குத்தனமான சீரியல் என்ற எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால், அதையும் தாண்டி சீரியல் தற்போது வெற்றிகரமாக பயணித்து ரசிகர்களின் குட் புக்கில் இடம்பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலின் புகழ் மேலும் அதிகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த தொடரின் நாயகியான பவித்ரா ஜனனிக்கு போன் செய்துள்ள அனுஷ்கா, 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி, சீரியல் குழுவினர் பாராட்டியுள்ளார். இதனைபதிவிட்டுள்ள பவித்ரா, 'அனுஷ்கா முதலில் போன் செய்த போது ப்ராங்க் என்று நினைத்தேன். தொடர் குறித்து அவர் பாராட்டிய போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது. அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் பொறிக்கப்படும்' எனவும் சிலாகித்து கூறியுள்ளார்.