காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் உள்ளத்தை அள்ளித்தா. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கெனவே முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஜமீலா என்ற தொடரை அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த தொடர் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை பற்றிய தொடராக ஒளிபரப்பாக இருக்கறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஆட்டோ ஓட்டி, ஆட்டோ ராணி என்ற பெயரெடுத்துக் கொண்டு ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை தனியொருத்தியாக நின்ற காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை களம் என்கிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் வேகமாக கொண்டு சேர்த்து பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாத கேரக்டராக ஆட்டோ ராணி கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தொடராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.