சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரின் முதல் புரோமோ வெளியான போதே, பிற்போக்குத்தனமான சீரியல் என்ற எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால், அதையும் தாண்டி சீரியல் தற்போது வெற்றிகரமாக பயணித்து ரசிகர்களின் குட் புக்கில் இடம்பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலின் புகழ் மேலும் அதிகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த தொடரின் நாயகியான பவித்ரா ஜனனிக்கு போன் செய்துள்ள அனுஷ்கா, 'தென்றல் வந்து என்னை தொடும்' தொடரை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறி, சீரியல் குழுவினர் பாராட்டியுள்ளார். இதனைபதிவிட்டுள்ள பவித்ரா, 'அனுஷ்கா முதலில் போன் செய்த போது ப்ராங்க் என்று நினைத்தேன். தொடர் குறித்து அவர் பாராட்டிய போது அவர் மீதான மரியாதை அதிகரித்தது. அவரிடம் பெற்ற பாராட்டுகள் என் இதயத்தில் பொறிக்கப்படும்' எனவும் சிலாகித்து கூறியுள்ளார்.