ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜிஎன்ஆர்.குமாரவேலன் அதன்பிறகு இயக்கிய ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன்பிறகு விக்ரம் பிரபு நடித்த வாகா படம் பெரும் தோல்வி அடைந்தது. தற்போது அவர் அருண் விஜய் நடிப்பில் சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நாளை வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினம் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ஹரிதாஸ் படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் வாகா படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் சினம் படத்திற்காக ஒன்றிணைந்தோம்.
வாகா படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் என் தந்தை, என் முந்தைய படமான ஹரிதாஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் எமோஷன்ஸ்தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் சினம் படத்தின் பயணம் ஆரம்பித்தது. த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான படமாக நிச்சயம் இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள். என்கிறார் குமரவேலன்.