20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வருகிற 16ம் தேதியை தேசிய சினிமா தினமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர். மக்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும், அவர்கள் தியேட்டர் அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தேசிய சினிமா தினம் வருகிற 23ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் நிஜமான காரணம் அதுவல்ல. வருகிற 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதேபோல் ஹிந்தியில் ரன்பீர் கபூர் , அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரா திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.