வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, உருவாகும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் வருகின்ற 30ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டருடன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகியோரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் இடம்பெற்றுள்ளது. இது பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் ஒரு பகுதிதான் என்றாலும் இது எந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பது பின்னர் தான் தெரியவரும்.




