இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
10 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தனுஷ் நண்பராக நடித்திருந்தார். பள்ளி பருவ காதலை சொன்ன இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. அது விமர்சனத்தையும் சந்தித்தது. படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடலும் உலகம் முழுக்க ஹிட்டாகி சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மீண்டும் ஆந்திராவில் தெலுங்கு பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். திரையிட்ட தியேட்டர்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புதுப்படத்திற்கு நிகராக படம் ஒடுவதை பார்த்து ஆந்திராவே வாயடைத்து நிற்கிறதாம்.
பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு என்.டி.பாலகிருஷ்ணாவோடு ஒரு படத்திலும், சிரஞ்சீவியோடு ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு 3 படம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேப்போல் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். அதையொட்டியும் இந்த படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.
3 படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.