புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார்.
சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த தனது தெலுங்கு படங்களுக்கு தானே பேசி வருகிறார். இதனால் சமந்தாவுடன் ஆன டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.