'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
மலையாள நடிகர் திலீப் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு 3 மாத சிறை தண்டனையும் அனுபவித்தார். அதனால் அவர் மக்களின் செல்வாக்கை இழந்து விட்டார் என சொல்லப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் அவர் சிறையில் இருந்தபொழுதே, அவர் நடித்த ராம்லீலா என்கிற படம் வெளியானது.
அதுவரை திலீப் நடித்த படங்களை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்று, திலீப்பின் முதல் 100 கோடி வசூல் படம் என்கிற பெருமையையும் பெற்றுத்தந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்கோபி என்பவர் இயக்கியிருந்தார். அதன்பிறகு மோகன்லாலின் மகன் பிரணவை வைத்து அருண்கோபி இயக்கிய 21ஆம் நூற்றாண்டு படம் சரியாகப் போகவில்லை. இந்த நிலையில் மீண்டும் அருண்கோபிக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் திலீப். இது திலீப் 147வது படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறார் நடிகை தமன்னா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று(செப்., 1) நடைபெற்றது. இதில் தமன்னாவும், திலீப்புடன் சேர்ந்து கலந்து கொண்டார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, ஹிந்தியிலும் கூட படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவர் திரையுலகிற்கு வந்து இத்தனை வருட காலத்தில் இப்போது தான் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நேரம் வந்துள்ளது. புலிமுருகன் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்