நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக சிறந்த நடிப்பை அவர் வழங்கியதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வேளையில் இப்படி அவர் மருத்துவமனையில் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை மட்டுமல்ல அவரை மானசீக குருநாதராக வழிபடும் திரையுலகினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, இப்போதும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை ராதிகாவிற்கும் இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரான்சில் இருக்கும் ராதிகா அங்கே உள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ராதிகா, “என் இனிய டைரக்டர் பாரதிராஜா அவர்களே.. நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப என்னுடைய சிறப்பு பிரார்த்தனை.. உங்களிடம் பேசுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.