பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
கடுகு, கோலிசோடா 2, நேத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறவர். தற்போது யார் இவர்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்து வரும் சுபிக்ஷா, ‛சூரகன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தேர்ட் ஐ நிறுவனத்தின் சார்பாக கார்த்திகேயன் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் இயக்குகிறார். பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார், அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் படம். சுபிக்ஷாவுக்கு சூரகன் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.