என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் மாதவன் இயக்கம், நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'ராக்கெட்ரி'. இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அந்தப் படம் வெளிவந்தது.
அந்தப் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒருவர், “'ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார். அதே சமயம் அவரது மகன் வேதாந்த் நாட்டிற்காக நீச்சலில் பதக்கங்களைப் பெறுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை வேறொரு ரசிகர்கள் மாதவனுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மாதவன், “என் தியாகத்திற்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் 'ராக்கெட்ரி' சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்,” என 'ராக்கெட்ரி' பற்றி சந்தேகங்கள் அனைத்திற்கும் சேர்த்து பதிலளித்துள்ளார்.