என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஹிந்தித் திரையுலகத்தின் முக்கியமான ஹீரோக்களில் முதன்மையானவர் ஆமீர்கான். அவர் நடித்து வெளிவரும் படங்கள் எப்போதுமே வித்தியாசமான படங்களாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை பாலிவுட் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அவருடைய கடைசி இரண்டு படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து அந்த நம்பிக்கையை குலைத்துவிட்டது.
ஆமீர்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது உண்மை. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன பின்னும் வசூலில் 50 கோடியைத் தாண்டவில்லை. ஆமீர்கான் நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படமும் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பட வெளியீட்டிற்கு முன்பாக முக்கிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார் ஆமீர்கான். ஆனால், பட வெளியீட்டிற்குப் பின் கிடைத்த மோசமான வரவேற்பால் அவர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாராம். மும்பை மீடியாவைச் சேர்ந்தவர்கள் அவரைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பதில்லையாம்.
அதே சமயம் படத்தின் மூலம் எந்த நஷ்டமும் இல்லை என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்திற்காக ஆமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்கிறார்கள். எந்த நஷ்டம் வந்தாலும் அதில் பங்கெடுப்பேன் என அவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்.