போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

'பூவே உனக்காக' சீரியலில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி ரீப்ளேஸ் செய்யப்பட்டதால் டிஆர்பியில் பெர்பார்மன்ஸ் செய்ய முடியாமல் திணறியது. இதனையடுத்து சமீபத்தில் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த சீரியலின் தொடக்கத்தில் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. கன்னடத்து பைங்கிளியான இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னி ஆனார். சீரியலை விட்டு விலகிய பின் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ரசிகர்கள் பலரும் ராதிகா ப்ரீத்தி ஏன் சீரியலை விட்டு விலகினார்? மீண்டும் சீரியலில் நடிப்பாரா? என கேள்விகள் கேட்டு வந்தனர். இதற்கிடையில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்த 'நாதிரு தின்னா' திரைப்படத்தின் ரிலீஸ் புரோமோஷன்களும் கலைக்கட்டியதால் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ராதிகா ப்ரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், ராதிகா ப்ரீத்தியின் ரசிகர்கள் பலரும், அவரது ரீ- என்ட்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.