எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
விஜய் தற்போது முதன்முறையாக வாரிசு என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவ வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பாலிவுட்டிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து இந்த படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்றும் அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எண்பது, தொண்ணூறுகளில் ஆக்சன் கிங்காக வலம் வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பிரபல ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். அந்த வகையில் முதன்முறையாக விஜய்யுடன் இவர் இணைந்து நடிப்பதும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்யும்.