சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

கமரகட்டு, விந்தை, இணைய தலைமுறை, பிழை, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனீஷாஜித். சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை தொடரில் நடிக்க தொடங்கினார். உயிரே, அம்மன் தொடர்களில் நடித்த அவர் கடைசியாக கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.
விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பேசிய படி சம்பளம் தரவில்லை. 6 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளனர். தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கினார்கள். படப்பிடிப்பில் சரியான பாதுகாப்பு இல்லை. சின்ன சின்ன விபத்து ஏற்பாட்டாலும் அதையும் தாங்கிக் கொண்டு நடிக்க வேண்டியது இருந்தது. கொரோனா காலத்தில்கூட விடுமுறை தராமல் வேலை வாங்கினார்கள். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.




