ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் பற்றி தான். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று இந்த போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இணைந்து பாடினார். தற்போது ஆராதனா பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா இதற்கு முன்னர் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.