பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! |

தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிரபலமானார். 'புஷ்பா' படத்தின் வெற்றி அவருடைய மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது.
தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து வருகிறார். 'புஷ்பா' பட வெளியீட்டிற்கு முன்பாக 2 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா இப்போது 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ஹிந்தியில் நடிப்பதென்றால் சம்பளம் 4 கோடியாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்து பூஜா ஹெக்டே 4 கோடி வரை வாங்குகிறாராம். இப்போது ராஷ்மிகாவும் 4 கோடி சம்பளத்தைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.




