சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை |

தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்ததும் மிகவும் பிரபலமானார். 'புஷ்பா' படத்தின் வெற்றி அவருடைய மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியது.
தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்திலும், ஹிந்தியில் சில படங்களிலும் நடித்து வருகிறார். 'புஷ்பா' பட வெளியீட்டிற்கு முன்பாக 2 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா இப்போது 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ஹிந்தியில் நடிப்பதென்றால் சம்பளம் 4 கோடியாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகிகளில் நயன்தாரா மட்டுமே 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்து பூஜா ஹெக்டே 4 கோடி வரை வாங்குகிறாராம். இப்போது ராஷ்மிகாவும் 4 கோடி சம்பளத்தைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.