தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
வலிமை படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கும் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்.
இந்த நிலையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை கடலுக்கு அடியிலும் நடத்தி உள்ளார்கள். அதாவது கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 100 அடி ஆழத்திற்கு சென்று அஜித்தின் பேனர்களை வைத்துள்ளார்கள். அது குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.