பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022' என்ற குறும்பட திருவிழாவில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது: இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்த்த போது, இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி இயக்கனருக்கான திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களே இல்லை. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். குறும்படங்களால் இயக்குனர்கள் உருவாகின்றனர் ஆனால், எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் வரவே இல்லை. இனிமேல் கதாசிரியர்களிடம் கதையை பெற்று அதன் பின் நாயகர்களை தேடிச் செல்ல வேண்டும். இயக்குனர்களை போல எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து விருது தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.