இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்தபடியாக அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படமும் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அரவிந்த் சந்திரசேகர் என்ற அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். மில்டரி பின்னணி கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ள நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு அறிவழகன் இயக்கத்தில் குற்றம்- 23 என்ற படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.