சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் | மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாரா, சுந்தர் சி மோதல், நின்ற படப்பிடிப்பு | இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் |
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வசிக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சட்டப்படி குற்றம்' படத்தின் விளம்பர செலவுக்காக ரூ.76,112 ரூபாயை வழங்காததை தொடர்ந்து அந்த விளம்பர உரியாமையாளர் சரவணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை சந்திரசேகர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கோர்ட் உத்தரவை அமல்படுத்த போலீசாரின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆனால் எப்படி ஜப்தி செய்ய வந்தனர் என தெரியவில்லை'' என்றார்.