ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கியதன் மூலமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெற்றவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதேசமயம் பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான், மீண்டும் டைரக்ஷனில் இறங்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் அல்போன்ஸ் புத்ரன் எப்போதுமே தமிழ் சினிமாவில் உள்ள ஜாம்பவான்களை பற்றி தனது வியப்பையும், ஆர்வத்தையும் தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், இளையராஜா ஒரு இசைப்பள்ளி துவங்க வேண்டும் என்றும், அதில் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் புரபசர்களாக பணியாற்ற வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல, இசையமைப்பாளர்கள் கீரவாணி, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், தேவா, அனிருத் போன்றவர்கள் இதில் விசிட்டிங் புரபசர்களாக தங்களது பங்களிப்பை தரவேண்டும் என்றும் எல்லா விதமான இசையையும் இங்கே கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் தனது அதீத விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன் நிச்சயமாக இது ஒரு நாள் நடக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.