விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் புரமோஷன் சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து தெலுங்கில் தான் நடித்த புஷ்பா, சீதா ராமம் போன்ற படங்களின் புரமோஷன் சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சோசியல் மீடியாவில் தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்ற போது எதற்காக கலந்து கொள்ளவில்லை? என்று ஒரு ரசிகர் அவரிடம் கேட்டபோது, பல கமிட்மெண்டுகள் இருந்த காரணத்தால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என என்னை சென்னையில் நடக்கும் எனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்கப் போகிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.