எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டுமே தன் படங்களில் அதிகமாக வாய்ப்புகளைக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பிரபல பாலிவுட் ஹீரோவான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது கரண் மீதான 'நெப்போட்டிசம்' விமர்சனங்கள் அதிகம் இருந்தது.
சமீபத்தில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியான 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த சமந்தா “தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஹீரோயின் சமந்தாவுடன் இணைந்து நடித்த போது,“ என்று பேசினார். அப்போது இடை மறித்த கரண், நயன்தாரா தன்னுடைய லிஸ்ட்டில் இல்லை என்றார். அதை சமாளித்து சமந்தா தொடர்ந்து பேசினார்.
நயன்தாரா பற்றி கரண் சொன்னது குறித்து நயன்தாரா ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். “ஆலியா பட் போன்ற வாரிசு நடிகைகள்தான் உங்களுக்குத் தெரியும், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அவரைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசுங்கள் கரண், நயன்தாரா சுயமாக முன்னேறியவர், வாரிசு நடிகை அல்ல,” என்றும் பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அளித்துள்ளனர்.
நயன்தாரா தற்போது ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.