எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமா படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெறாமல் ஐதராபாத்தில் தான் அதிகம் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் தற்போது நடித்து வரும் படப்பிடிப்புகளுக்கான இடம் ஐதராபாத் மட்டுமே. இவர்கள் யாரும் தங்களது படங்களின் படப்பிடிப்பை சென்னையில் அதிகம் நடத்துவதில்லை. இதனால், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்பது உண்மை.
ரஜினி அடுத்து நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாம். சிறைச்சாலை செட் ஆக போடப்பட்டுள்ள அந்த செட்டில்தான் முழு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்காக ரஜினிகாந்த் விரைவில் ரஜினிகாந்த் அங்கு செல்ல உள்ளாராம்.
நெல்சன் கடைசியாக இயக்கிய 'பீஸ்ட்' படம் ஒரு ஷாப்பிங் மால் செட்டில்தான் படமாக்கப்பட்டது. அடுத்த படத்தையும் ஒரு 'செட்'டிலேயே நெல்சன் முடிக்க உள்ளார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை விடவும் அதிகம் லாபம் தரக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்களாம்.