சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
தமிழ் சினிமா படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெறாமல் ஐதராபாத்தில் தான் அதிகம் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் தற்போது நடித்து வரும் படப்பிடிப்புகளுக்கான இடம் ஐதராபாத் மட்டுமே. இவர்கள் யாரும் தங்களது படங்களின் படப்பிடிப்பை சென்னையில் அதிகம் நடத்துவதில்லை. இதனால், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்பது உண்மை.
ரஜினி அடுத்து நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாம். சிறைச்சாலை செட் ஆக போடப்பட்டுள்ள அந்த செட்டில்தான் முழு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்காக ரஜினிகாந்த் விரைவில் ரஜினிகாந்த் அங்கு செல்ல உள்ளாராம்.
நெல்சன் கடைசியாக இயக்கிய 'பீஸ்ட்' படம் ஒரு ஷாப்பிங் மால் செட்டில்தான் படமாக்கப்பட்டது. அடுத்த படத்தையும் ஒரு 'செட்'டிலேயே நெல்சன் முடிக்க உள்ளார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை விடவும் அதிகம் லாபம் தரக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்களாம்.