25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமந்தா கலந்து கொள்கிறார். இதற்கான அறிவிப்பை விழாக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டே இந்த விழாவில் நான் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். அப்போது கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய மக்களையும், ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் இந்தியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகிய இரு சமூகங்களும் ஒருமனதாக ஒன்றாகக் கொண்டாடுவது ஒரு உற்சாகமான உணர்வு. என்கிறார் சமந்தா.
விழா இயக்குனர் மிது பௌமிக் லாங்கே கூறியதாவது: சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவர் படவிழாவின் ஒரு பகுதியாக இருப்பார். அவரை நாங்கள் கொண்டாடுவோம். இந்த ஆண்டு விழாவில் அவரது பணிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.