பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களாக நடிக்க தொடங்கி, பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார் கவுண்டமணி. அப்படி நடிக்க தொடங்கியவர் ஒரு கட்டத்தில் செந்தில் உடன் காமெடி கூட்டணி அமைத்து ஏராளமான படங்களில் நடித்தார்.
கவுண்டமணி -செந்தில் காமெடி இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு 1980க்கு பிறகு 2000 வரை அதிகமான படங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. இரண்டாயிரத்து பிறகு அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்த போதும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டு வந்தார். கடைசியாக 2016 ல் வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மீண்டும் கவுண்டமணி நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக ஒரு காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டும் என்பதற்காக அவரை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன் படத்தில் கவுண்டமணி நடிப்பது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.