சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 5 படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியான படம் பாகுபலி. இந்த படம் திரைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் அதுகுறித்து தற்போது அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், பாகுபலி படத்தில் நடித்து ஏழு வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை அவந்திகா என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமை என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.