ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் பற்றி ஆலியா பட்டிடம் கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த ஆலியா "என் கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்பாக இருப்பது என்பது குறித்து எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல தோழிகள். எனக்கு அந்த இருவரையும் மிகவும் பிடிக்கும்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட கரன் ஜோஹரும் பதில் சொன்ன ஆலியா பட்டும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகளின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் என்பது அனைவருக்கும் தெரியும்.




