ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'விராட பருவம்' படத்தின் பிரமோஷன் பேட்டி ஒன்றை அளிக்கும் போது அவர் சொன்ன சில விஷயங்கள் சர்ச்சை ஆனது.
'காஷ்மீர் பைல்ஸ்' படம் பற்றியும், மாட்டுக்கறியை எடுத்துச்சென்ற இஸ்லாமியரைத் தாக்கிய நிகழ்வுக்கு என்ன வித்தியாசம் என்று சொல்லியிருந்தார். சர்ச்சை எழுந்த பின் அது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதற்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி சாய் பல்லவின் மனுவை ரத்து செய்துள்ளார்.