ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திற்காக அம்ரிட்சரில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறதாம். அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஷங்கர் மீண்டும் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.