தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திற்காக அம்ரிட்சரில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறதாம். அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஷங்கர் மீண்டும் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.