நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த மேல்விலாசம் மற்றும் அப்போதேகேறி என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மாதவ் ராமதாஸ்.. இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக மேல்விலாசம் திரைப்படம் ஒரு நீதிமன்ற அறையிலேயே ஒண்ணே முக்கால் மணி நேரம் வெறும் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.. அதேபோல மருத்துவமனையை மையப்படுத்தி உருவாகி இருந்த அப்போதேகேறி படமும் மருத்துவம், ஆன்மா கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாதவ் ராம்தாஸ் முதன்முதலாக தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த தகவலை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாதவ் ராம்தாஸ்