‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடித்த மேல்விலாசம் மற்றும் அப்போதேகேறி என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் மாதவ் ராமதாஸ்.. இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக மேல்விலாசம் திரைப்படம் ஒரு நீதிமன்ற அறையிலேயே ஒண்ணே முக்கால் மணி நேரம் வெறும் விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது.. இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.. அதேபோல மருத்துவமனையை மையப்படுத்தி உருவாகி இருந்த அப்போதேகேறி படமும் மருத்துவம், ஆன்மா கலந்த ஒரு வித்தியாசமான படமாக உருவாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாதவ் ராம்தாஸ் முதன்முதலாக தமிழில் ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த தகவலை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மாதவ் ராம்தாஸ்