ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் 2010ல் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் சென்னையில் குடி இருந்த ரம்பா, திருமணத்துக்கு பிறகு கனடா நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை வந்திருக்கிறார் ரம்பா. அப்படி வந்தவர், நடிகர் அருண் விஜய்யின் தங்கையான நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து யானை படத்தை சென்னையில் உள்ள ஊர் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார்.
அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தியேட்டரை விட்டு வெளியே வந்த நடிகை ரம்பா மீடியாக்களிடம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தார். மேலும், யானை படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளை குழந்தைகள் ரசித்து பார்க்கிறார்கள். ஹரி சிறப்பாக இயக்கி உள்ள இந்த படத்தில் அருண் விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்றும் தெரிவித்தார் ரம்பா.