கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் 2010ல் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் சென்னையில் குடி இருந்த ரம்பா, திருமணத்துக்கு பிறகு கனடா நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை வந்திருக்கிறார் ரம்பா. அப்படி வந்தவர், நடிகர் அருண் விஜய்யின் தங்கையான நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து யானை படத்தை சென்னையில் உள்ள ஊர் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார்.
அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தியேட்டரை விட்டு வெளியே வந்த நடிகை ரம்பா மீடியாக்களிடம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தார். மேலும், யானை படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளை குழந்தைகள் ரசித்து பார்க்கிறார்கள். ஹரி சிறப்பாக இயக்கி உள்ள இந்த படத்தில் அருண் விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்றும் தெரிவித்தார் ரம்பா.