இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விவேக் ஓபராய் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பயங்கரமாக இருந்தது. பிரித்விராஜை திறமையின் பவர் ஹவுஸ் என்று சொல்வேன். அவர் ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், படம் இயக்குகிறார், தயாரிப்பாளராக இருக்கிறார்.. என்ன வேலை தான் அவர் செய்யவில்லை..! படப்பிடிப்பில் எங்களை எல்லாம் மீறி ஏதாவது ஒரு விஷயம் செய்து அசத்தி விடுவார். அதுதான் எங்களை பயப்படுத்தும். அவ்வளவு ஏன் பெண் வேடம் போட்டால் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தை கூட அவரை நடித்து விடுவார்.. அவரை கேரளாவின் கமல்ஹாசன் என்று தான் நான் சொல்வேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.