தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அவரது 15வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஆர்சி 15 என தற்காலிகமாக டைட்டில் வைத்து படமாக்கி வரும் ஷங்கர் தற்போது சிட்டிசன் என்ற தலைப்பு வைப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதே பெயரில் கடந்த 2001ம் ஆண்டு தமிழில் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.