ரஜினி, மம்முட்டி, மோகன்லால், ஆமீர்கான் வீடுகளில் தேசிய கொடி ஏற்றம் | திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் |
கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் புகழ்பெற்றார். ஒட்டிப்பிறந்த பெண்களாக சாருலதா என்ற படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார். தற்போது ஹிந்தி வெப் தொடர்கள் மூலம் பான் இந்தியா நடிகையாகிவிட்டார்.
இந்த நிலையில் மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் குறிப்பாக தமிழ் நடிகைகள் சில நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டங்களில் நடிகைகளின் தோற்றம் பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. அவர்களின் நடிப்பு மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்கு பிறகு நாயகிகள் வெள்ளையாக இருக்க வேண்டும் ஒல்லியாக உடல்கட்டுகோப்புடன் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.
மும்பை நடிகைகள் ஒல்லியா உடல்கட்டுக்கோப்புடன் இருப்பதும், வெள்ளையா இருப்பதும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்தது. ஆனால் இங்கு அப்படி இல்லை. இதனை புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் தமிழ் நடிகைகள் நெருக்கடியை சந்தித்து வந்தார்கள். கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போது வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கூட நமது எல்லை விரிவடைந்திருக்கிறது. இவ்வாறு பிரியாமணி கூறியயுள்ளார்.