ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் புகழ்பெற்றார். ஒட்டிப்பிறந்த பெண்களாக சாருலதா என்ற படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார். தற்போது ஹிந்தி வெப் தொடர்கள் மூலம் பான் இந்தியா நடிகையாகிவிட்டார்.
இந்த நிலையில் மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் குறிப்பாக தமிழ் நடிகைகள் சில நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டங்களில் நடிகைகளின் தோற்றம் பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. அவர்களின் நடிப்பு மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்கு பிறகு நாயகிகள் வெள்ளையாக இருக்க வேண்டும் ஒல்லியாக உடல்கட்டுகோப்புடன் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.
மும்பை நடிகைகள் ஒல்லியா உடல்கட்டுக்கோப்புடன் இருப்பதும், வெள்ளையா இருப்பதும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்தது. ஆனால் இங்கு அப்படி இல்லை. இதனை புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் தமிழ் நடிகைகள் நெருக்கடியை சந்தித்து வந்தார்கள். கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போது வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கூட நமது எல்லை விரிவடைந்திருக்கிறது. இவ்வாறு பிரியாமணி கூறியயுள்ளார்.