25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பாவனா, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானார். அதன்பிறகு இங்கு சில படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும், கன்னடத்திலும் அதிக படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆதம் ஜான்' என்ற மலையாளப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்திருந்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்த மலையாள படம்.
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.