எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார். இவர்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். 1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க சிறப்பு தோற்றத்தில் அஜித் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் நடித்தது இல்லை. இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள் .
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.