இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அர்ஜுன் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களையும் இயக்கி வந்தார். தற்போது படங்களில் முக்கிய முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ஜுன் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அர்ஜுன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் பிரேமா பரஹா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க இயக்குகிறார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரார். இந்தப் படத்தில் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
அர்ஜூனின் ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.