'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி |

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக தற்போதைய தலைவர் டி.ராஜேந்தர் போட்டியிடவில்லை.
இந்த தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். தலைவராக கே.ராஜன் வெற்றி பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணை தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணை செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வு பெற்றார்கள். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.