தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக தற்போதைய தலைவர் டி.ராஜேந்தர் போட்டியிடவில்லை.
இந்த தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். தலைவராக கே.ராஜன் வெற்றி பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணை தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணை செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வு பெற்றார்கள். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.