நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை தி.நகரில் உள்ள ஒரு நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து வந்தார்.
அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலை மலேசியாவில் உள்ள இப்ராஹிம் என்ற தொழில் அதிபரை ஒரு இரவு சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறி அதற்காக பணபேரமும் நடத்தினார். இதுகுறித்து அமலாபால் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடன பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஸ்ரீதர், அழகேசன், தொழில் அதிபர்கள் பாஸ்கரன், இப்ராஹிம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி தொழிலதிபர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.