பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

திருப்பதி : திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு கோயில் வளாகத்தில் அவர்கள் போட்டோஷூட் நடத்திய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாய் சுற்றி வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று திருமணம் செய்து கொ்டனர். மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமணத்திற்கு பிறகான போட்டோஷூட்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நடத்தி உள்ளனர். விதிமீறி இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோவில் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதை மீறி நயன்தாரா காலில் செருப்பு அணிந்தபடி இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் சர்ச்சையாகி உள்ளது.




