பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவல்கள் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என சில செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிப்பதாகவும், மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ரஜினியை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய விருப்பம். அது அவரது 169 படத்தில் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் துவங்க இருக்கிறது என்றும் செப்டம்பரில் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.