'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதனை தற்போது மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இது இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சோழ மன்னர்களின் கதை என்பதால் சோழ மண்ணான தஞ்சாவூரில் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட்டு புரமோசன் பணிகளை தொடங்க இருக்கிறார் மணிரத்னம். தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பிறகு படக்குழுவினர் உலக நாடுகள் முழுக்க படத்தின் புரமோசனுக்காக செல்ல இருக்கிறார்கள்.