விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதனை தற்போது மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இது இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சோழ மன்னர்களின் கதை என்பதால் சோழ மண்ணான தஞ்சாவூரில் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட்டு புரமோசன் பணிகளை தொடங்க இருக்கிறார் மணிரத்னம். தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பிறகு படக்குழுவினர் உலக நாடுகள் முழுக்க படத்தின் புரமோசனுக்காக செல்ல இருக்கிறார்கள்.