ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பல வருட காலங்களாக பல ஹிட் சீரியல்களை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தயாரித்த சித்தி 2 சீரியலும், திடீரென முடித்து வைக்கப்பட்டது. தற்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய தொடரை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்த தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னதாக கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் விரைவிலேயே சீரியலை விட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி ராதிகாவின் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.