மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

பல வருட காலங்களாக பல ஹிட் சீரியல்களை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தயாரித்த சித்தி 2 சீரியலும், திடீரென முடித்து வைக்கப்பட்டது. தற்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய தொடரை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்த தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னதாக கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் விரைவிலேயே சீரியலை விட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி ராதிகாவின் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.