கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பல வருட காலங்களாக பல ஹிட் சீரியல்களை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தயாரித்த சித்தி 2 சீரியலும், திடீரென முடித்து வைக்கப்பட்டது. தற்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய தொடரை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்த தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னதாக கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் விரைவிலேயே சீரியலை விட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி ராதிகாவின் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.