'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. டைம் லூப் திரைக்கதையை அனைவருக்கும் புரியும் விதமாக உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் . கல்யாணி ப்ரியதர்சன் கதாநாயகியாக நடித்திருந்தார் . யுவன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் வசூலை ரூ.100 கோடியை கடந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தின் உண்மையான வசூலை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் முறையாக சொல்லவில்லை என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் உலக அளவில் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படம் இது. இந்த வெற்றியை தேடித் தந்த சிம்பு, வெங்கட்பிரபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் நடித்து முடித்துள்ள வெந்து தணிந்தது காடு விரைவில் வெளியாக உள்ளது .