கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித் , ஷாலினி ஆகியோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்துள்ளார் தயாநிதி. அதோடு, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு அவரைச் சுற்றி இருக்கும் பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அவரது மனைவி அனுஷாவும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் இரண்டு நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக வேறு யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது. உண்மையில் ஒரு அல்டிமேட் மாலை என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி திடீரென்று அஜித் குடும்பத்தினருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாநிதி அழகிரி வெளியிட்டதை அடுத்து ஒருவேளை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறாரா, அதற்கான சந்திப்பாக இது இருக்குமா என ரசிகர்கள் ஆயிரம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.