மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நான்கு வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியாகும் படம் இது. அதோடு விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கமல் ரசிகர்களுக்கு இணையாக சூர்யா ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விக்ரம் படத்திற்கு மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் வசனம் எழுதியிருக்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில், இப்படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் அளித்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வலிமையானதாகவும் எனர்ஜிடிக்காகவும் இருக்கும். சூர்யா திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை கவர கூடியதாக இருக்கும். அவரது கெட்டப்பை நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.