ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா |

‛நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே அஜித், நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற மற்றும் வலிமை படத்திலும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்போது அவரின் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில் அப்படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்தின் 62வது படத்தை மிக வித்தியாசமான கதையில் இயக்கப் போகிறேன். என்னுடைய 100 சதவீத உழைப்பையும் முயற்சியையும் இந்த படத்துக்காக கொடுப்பேன் . அதனால் இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை ரசிகர்கள் பார்க்கலாம். தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் இது கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.